திருத்தணி | நடுரோட்டில் பட்டாக்கத்தியால் இளைஞர் செய்த சம்பவம்! தட்டி தூக்கிய போலீசார்!
Thiruthani youth cake Cut
திருத்தணி அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:
திருவள்ளூர்: திருத்தணியை அடுத்து உள்ள வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). இவர் அவரது பிறந்த நாளை நண்பர்களுடன் நடுரோட்டில் கேக்கை வைத்து பட்டாகத்தியால் வெட்டியுள்ளார்.
விஷ்ணு பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை நண்பர்கள் தொலைபேசி மூலம் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இது குறித்து திருத்தணி போலீசுக்கும் தகவல் கிடைத்தால் தனிப்படை போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வேலஞ்சேரியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Thiruthani youth cake Cut