ஜே.சி.பி மீது சரிந்து விழுந்த நீர்தேக்க தொட்டி: ரெயில் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு.!
Thiruthani reservoir tank collapsed on JCP
திருத்தணி ரயில் நிலையத்தில் திருப்பதி, ரேணிகுண்டா, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை போன்ற இடங்களுக்கு தினமும் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் மூலம் 5,000 மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி ரயில் நிலையத்தில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஜே.சி.பி வாகனம் மூலம் இடிக்க முயன்றனர்.
அப்போது திடீரென தொட்டி ஜே.சி.பி வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை சுதாரித்துக் கொண்ட ஜேசிபி ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறங்கியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் திருத்தணி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Thiruthani reservoir tank collapsed on JCP