பாஜக-அதிமுக கூட்டணி முறிந்த நிலையில், அதிமுகவினரை கொந்தளிக்கவைத்த சம்பவம்!
Thiruporur MGR Statue Kavi clouth issue
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முழு உருவ சிலை அமைந்துள்ளது.
இந்த சிலையை சுற்றி இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு இருந்த போதும், அதற்கு பூட்டு எதுவும் போடப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் இந்த எம்ஜிஆர் சிலையின் மீது காவி துண்டை அணிவித்து சென்றனர்.
இதனை பார்த்து அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்புடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக இந்த பகுதிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
மேலும், பாதுகாப்பு இல்லாமல் பிறந்த எம்ஜிஆர் சிலைக்கு போடப்பட்டு, அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காவி துண்டு அணிவித்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Thiruporur MGR Statue Kavi clouth issue