" எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை " காவல் அதிகாரியின் விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியை சார்ந்தவர் செல்வமுருகன். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதமாக செல்வமுருகன் திருச்செந்தூர் காவல் நிலையத்தில், எஸ்.பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல பணியை முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டிற்கு சென்ற செல்வமுருகன், கடைவீதிக்கு செல்வதாக கூறி வெளியே வந்தவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தேடிய நிலையில், அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் இருந்து விஷமருந்தி பிணமாக வாயில் நுரை தள்ளிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ள கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur SP Special cop suicide and died in forest area


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->