திருச்சி.! நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையோரம் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையோரம் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் கீரிப்பட்டி யிலிருந்து 280 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது சிறுநாவலூர் அருகே எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையின் இடது புறமாக லாரி ஒதுங்கியபோது அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் வயலில் விழுந்த நிலையில் லாரி ஓட்டுனர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த உப்பிலியபுரம் காவல்துறையினர், காயமடைந்த லாரி ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The truck overturned in a field in Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->