தலைப்பொங்கலை கொண்டாட சென்ற புது மாப்பிள்ளை.! மனைவி கண் முன்னே குளத்தில் மூழ்கி பலி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் தலைப் பொங்கலை கொண்டாடச் சென்ற புதுமாப்பிள்ளை மனைவி கண் முன்னே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தலையால்நடந்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மகன் மகாராஜன் (வயது28). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த சத்தியபிரபா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மகாராஜன் தலைப்பொங்கல் கொண்டாடுவதற்காக மனைவியுடன் நொச்சிகுளத்திற்கு நேற்று வந்துள்ளார். பின்பு அப்பகுதியில் உள்ள குலத்திற்கு குளிக்கச் சென்ற மகாராஜன் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதி சென்றுள்ளார்.

இதையடுத்து மகாராஜன் நீரில் மூழ்கியதை பார்த்த உன் மனைவி சத்திய பிரபா சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் நீண்ட நேரமாக தேடி, மகாராஜனை குளத்திலிருந்து பிணமாக மீட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார் மகாராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The groom drowned in the pond and died in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->