நாகப்படினம்: குளத்தில் குளிக்க சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்..!
The boy who went to bathe in the pool was killed
குளத்தில் குளிக்க சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்படினம் சால்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு திருமணமாகி மனைவியும் செல்வராகவன் என்ற மகனும் உள்ளனர். செல்வராகவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், செல்வராகவன் மற்றும் அவர் நண்பர்களுடன் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது குளத்தின் ஒரு கரையில் இருந்து மற்றோரு கரைக்கு நீந்தி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் அவரை தேடியுள்ளனர். இதனை அடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அவரை தேடி வருகின்றனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவர்கள் சிறுவனின் உடலை மீட்டனர்.
சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The boy who went to bathe in the pool was killed