ஒப்பந்தம் ரத்து ரத்துதான்..  பாகிஸ்தானின் கடிதங்களை நிராகரித்த மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த விவகாரத்தில்  இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிறுத்தியது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ, நீர் மறுக்கப்பட்டால் போர் தொடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் நீரை திறக்கக்கோரி பல முறை பாகிஸ்தான் நீர்வளத்துறை இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இவை குறித்து பேசிய சி.ஆர்.பாட்டீல், "சிந்து நதி நீர் எங்கும் செல்லப்போவதில்லை" என்று பாட்டீல் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியாவுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் கூறினார்.

பிலாவல் புட்டோ, ஒப்பந்தம் குறித்து போர் மிரட்டல் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற பாட்டீல், "இரத்தமும் நீரும் ஒன்றாகப் பாயும் என்று அவர் பேசினார், ஆனால் இத்தகைய வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The agreement is cancelled indeed The central government rejected Pakistans letters


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->