வாக்கு செலுத்திவிட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த முதியவர்.. தஞ்சாவூரில் ஜனநாயக கடமையுடன் சோகம்.! - Seithipunal
Seithipunal


பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு வாக்களிக்க வந்த நெசவு தொழிலாளி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் சட்டமன்ற தொகுதி அய்யம்பேட்டை அக்ரகாரம் லைன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 

இந்த நிலையில், இங்கு வாக்குச்செலுத்த அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்ற 62 வயது முதியவர், வரிசையில் காத்து இருந்துள்ளார். பின்னர் வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் முதியவரை மீட்டு அவசர ஊர்தி உதவியுடன் மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அர்ஜுனனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், அவருக்கு நெஞ்சு வலி மற்றும் லோபிரசர் இருந்தது தெரியவந்துள்ளது. அர்ஜுனன் நெசவு தொழிலாளியாக இருந்து வந்த நிலையில், இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். தனது இறுதி மூச்சுவரை ஜனநாயக கடமையாற்றி மயங்கி விழுந்து உயிரிழந்த அர்ஜுனனின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Papanasam Old man Arjunan Death after Complete Vote TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->