முக ஸ்டாலினு தான் வராரு., பஞ்சாயத்து பண்ண போறாரு.! சிக்கிய நடிகர் விமல்.!! - Seithipunal
Seithipunal


நடிகர்‌ விமல் தன்னிடம்‌ பணமோசடி செய்துவிட்ட நிலையில், அவரின் மனைவிக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதா? என பணத்தை இழந்த திரையரங்கு குத்தகைதாரர் திருநாவுக்கரசு, திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மதுக்கூர் செட்டித்தெரு பகுதியை சார்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

இது குறித்த கடிதத்தில், " வணக்கம்‌. நான்‌ பட்டுக்கோட்டை தாலுக்காவில்‌ உள்ள மதுக்கூரில்‌ வசித்து வருகிறேன்‌. 2016ம்‌ ஆண்டு பட்டுக்கோட்டையில்‌ திரையரங்கம்‌ ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன்‌. அப்போது " மன்னர்‌ வகையறா ” படத்தின்‌ படப்பிடிப்பிற்காக பட்டுக்கோட்டை வந்திருந்த நடிகர்‌ விமல்‌ என்னுடன்‌ நெருக்கமாக பழக ஆரம்பித்தார்‌. படப்பிடிப்பு துவங்கிய ஒரே வாரத்தில்‌ என்னை அழைத்த நடிகர்‌ விமல்‌ ” மன்னர்‌ வகையறா " என்ற படத்தை அவரே தயாரிப்பதாகவும்‌, செலவுகளுக்கு பணம்‌ தேவைப்படுவதாகவும்‌, சென்னைக்கு சென்றவுடன்‌ அனுப்பி வைப்பதாகவும்‌ கூறி கடன்‌ கேட்டார்.‌ நானும்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக பணம்‌ கொடுத்து கொண்டே இருந்தேன்‌.

 

ஒரு கட்டத்தில்‌ மேலும்‌ 50 இலட்சரூபாய்‌ மொத்தமாக தேவைப்படுவதாகவும்‌, ஒரே மாதத்தில்‌ திருப்பி தருவதாகவும்‌ கூறினார்‌. இதனை நம்பி எனது வீட்டை அடமானம்‌ வைத்து பணம்‌ வாங்கி
கொடுத்தேன்‌. நான்‌ கொடுத்த பணத்திற்கு ஈடாக ரூ 80 இலட்சத்திற்கு காசோலையும்‌ (இந்தியன்‌ வங்கி காசோலை எண்‌ 076759, கோடம்பாக்கம்‌ கிளை) கொடுத்தார்‌. படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர்‌ சொன்ன தேதியில் வங்கியில்‌ காசோலையை செலுத்தியபோது, போதிய பணமில்லாமல்‌ காசோலை திரும்பி விட்டது. இது குறித்து பல முறை முறையிட்டும்‌ இதுவரை என்‌ பணத்தை திருப்பித்தரவில்லை. கடன்‌ கொடுத்தவர்கள்‌ என்னை நெருக்கியதால்‌ வேறு வழியின்றி என்னுடைய விட்டை விற்று கடனை அடைத்தேன்‌.

நடிகர்‌ விமலுக்கு உதவப்போய்‌ இன்றைக்கு நடுத்தெருவில்‌ நிற்கிறேன்‌. நடிகர்‌ விமலால்‌ என்‌ குடும்பம்‌ பெருத்த நஷ்டத்தை சந்தித்து விட்டது. இந்நிலையில்‌ இன்றைய செய்தித்தாளில்‌ நடிகர்‌ விமலின்‌ மனைவி பிரியதர்ஷினி மணப்பாறையில்‌ திமுக சார்பில்‌ போட்டியிடப்‌ போவதாக வந்த செய்தியை கண்டூ அதிர்ச்சியடைந்தேன்‌. * ஸ்டாலின்‌ தான்‌ வாராரு விடியல்‌ தரப்‌ போறாரு * என என்னைப்‌ போன்றவர்கள்‌ நம்பி கொண்டிருக்கும்‌ வேளையில்‌, மோசடியின்‌ மொத்த உருவமாய்‌ திகழும்‌ நடிகர்‌ விமலுக்கு தாங்கள்‌ சீட்‌ கொடுக்க இருப்பதாக வரும்‌ தகவல்‌ நெஞ்சில்‌ ஈட்டியை பாய்ச்சுவது போல்‌ உள்ளது.

இவரைப்‌ போன்றவர்களால்‌ கழகத்திற்கு கெட்டபெயர்தான்‌ வரும்‌ என்பதை தங்களுக்கு தெரிவிப்பதற்காகவே தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளேன்‌. என்‌ மீது பிழையிருந்தால்‌ தயவுசெய்து மன்னிக்கவும் " என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், விஷயம் தெரிந்த விமர்சகர்கள் நடிகர்களை நம்பினால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். இதில், அவர் (விமல்) மனைவி திமுக சார்பில் போட்டியிட போவதால், இனி உங்கள் பணமும் கிடைக்காது. விற்பனை செய்த வீட்டினை வாங்கவும் முடியாது. இருப்பதை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

ஆனால், இது தொடர்பான கூற்றுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள விமல், தனது பக்கத்தில் தவறேதும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, " என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும்‌ நாளிதழ்களிலும்‌ வந்திருப்பவற்றை படித்தேன்‌. அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என்‌ வளர்ச்சியை பொறுக்காத சிலர்‌ இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்‌. யாரோ ஒருவரின்‌ தூண்டுதலின்‌ பேரில்‌ திருநாவுக்கரசு என்பவர்‌ என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்‌. திருநாவுக்கரசுக்கும்‌ எனக்கும்‌ எந்தவித நேரடித்‌ தொடர்போ பணம்‌ பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு, மேலும்‌ அவர்‌ மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்‌ என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

அவர்களின்‌ நோக்கம்‌ என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம்‌ பரிப்பதே ஆகும்‌. மேலும்‌ என்னைப்‌ பற்றிய தகவல்களை என்னிடம்‌ நேரடியாகவோ அல்லது என்‌ செய்தி தொடர்பாளர்‌ (PRO) பிரியாவிடமோ கேட்டுத்‌ தெரிந்துகொள்ளலாம்‌ " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Mannargudi Theater Contractor Thirunavukarasu Complaint Against Actor Vimal about Money Cheating


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->