#Breaking: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி காமுக கணித ஆசிரியர் கைது.!
Thanjavur Kumbakkonam School Teacher Sekar Arrested by Police about Sexual Torture Complaint by Girl Students
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் கணித பாட ஆசிரியர் சேகர். நகர மேல்நிலைப்பள்ளி கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆசிரியராக பணியாற்றி வந்த சேகர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் சேகர் துறை ரீதியான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், நீதிமன்றத்திற்கு சென்ற சேகர் தனது பணியை மீண்டும் பெற்று பணியாற்ற தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர் ஏன் மீண்டும் பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார்? என முற்றுகையிட, சில மாணவிகளுக்கு மீண்டும் காமுக ஆசிரியர் சேகர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் பள்ளி நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிடம் விஷயத்தை தெரிவிக்க, அவரது உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆசிரியர் சேகரை கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Kumbakkonam School Teacher Sekar Arrested by Police about Sexual Torture Complaint by Girl Students