சிகிச்சைக்கு வந்து மருத்துவரை தாக்கும் குண்டர்கள்.. தஞ்சை மருத்துவமனையில் பரபரப்பு.!
Thanjavur Govt Hospital Doctors Attack 10 April 2021
மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை, மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாதேஸ்வரன் மற்றும் ராகவன் என்று இரண்டு இளைஞர்கள், மது போதையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளனர்.
இதன் போது மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காத இளைஞர்கள், திடீரென பயிற்சி மருத்துவர் அருண்பாண்டியனை தாக்கியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மருத்துவரை காப்பாற்ற முயற்சித்த பணியாளர்களையும் மிரட்டி தாக்கிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த இரண்டு இளைஞர்களும் அதே மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Govt Hospital Doctors Attack 10 April 2021