13 வயது சிறுவன் கொரோனாவால் பலி.. தஞ்சாவூர் மருத்துவமனையில் சோகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்தது. இதனால் தலைநகர் சென்னை, சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட மாவட்டங்கள், மதுரை, தேனி மாவட்டங்களில் அடுத்தடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 78,535 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது. 44,094 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 51,699 ஆக உயர்ந்துள்ளது

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 வயதுடைய புதுக்கோட்டை சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிறுவனிற்கு கொரோனா உறுதியான நிலையில், சிறுவனின் மரணம் ஏற்பட்டுள்ளது. 

இந்த தகவல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மகனை நினைத்து பெற்றோர்கள் கதறியழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் 396 பேருக்கு கொரோனா உறுதியாகி, 266 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். மீதமுள்ளவர்கள் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur govt hospital 13 year child died due to corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->