கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 7 வயது சிறுமி கொலை.. தாய், கள்ளக்காதலன் கைது.. பதைபதைப்பு சம்பவம்.!
Thanjavur Child Girl Aged 7 Murder by Mother and Mother Affair Man Police Arrest Culprits
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு உடல் கல்லணையில் வீசப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோரிக்குளம் பகுதியை சார்ந்த பெண்மணி விஜயலட்சுமி. இவர் கணவரை இழந்து தனது 7 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், விஜயலட்சுமிக்கு அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கல்லணை கால்வாயின் 20 ஆவது கண் பாலத்தில் சிறுமியின் சடலம் கரை ஒதுங்கியது.
இந்த சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில், கரையொதுங்கிய சடலம் விஜயலட்சுமியின் 7 வயது மகள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, விஜயலட்சுமியின் உறவினர்கள் விஜயலட்சுமிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் துறையினர் விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது கள்ளக்காதலன் வெற்றிவேலுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், எங்கள் இருவரின் கள்ளக்காதலுக்கு சிறுமி இடையூறாக இருந்ததால், அவரை அடித்து கொலை செய்து உடலை கல்லணையில் வீசிவிட்டதாகவும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Child Girl Aged 7 Murder by Mother and Mother Affair Man Police Arrest Culprits