வாய்க்கால் புதரில் மூதாட்டியை வீசிச்சென்ற கொடூரர்கள்.. தஞ்சாவூரில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மூதாட்டியை உயிருடன் ஆற்றுக்குள் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் யாகசம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இரயில் நிலையம் அருகே இருந்துள்ளார். 

இரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் மரத்தடியில் பசி மற்றும் பட்டினியோடு கிடந்த மூதாட்டியை, சம்பவத்தன்று தேடி வந்த மர்ம நபர்கள் தூக்கிச்சென்று ஆனந்தவல்லி வாய்க்காலுக்குள் ஆடை இல்லாமல் போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. 

புதருக்குள் கிடந்த மூதாட்டியை பார்த்த பொதுமக்கள், அவர் இறந்து கிடப்பதாக நினைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சென்று பார்க்கையில் மூதாட்டிக்கு உயிர் இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், மூதாட்டியை கடத்தி சென்றது யார்?. என்ன நடந்தது?. என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Aged Lady Rescue at Drain Line Grass 16 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->