#திருவள்ளூர் : பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
Terrible fire accident in plastic godown in at tiruvallur
திருவள்ளூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே லட்சுமி புரத்தில் பட்டுராஜா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் இரண்டு ஏக்கரில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மறு சுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Terrible fire accident in plastic godown in at tiruvallur