மனைவியின் தங்கை பாலியல் பலாத்காரம்.. தென்காசி காவல்துறை அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வந்த 25 வயது வாலிபர், சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்த நிலையில், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி தனது இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

இந்த விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரியவந்ததை அடுத்து, இது குறித்து சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 25 வயது வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதனைப்போன்றே அங்குள்ள தென்காசி நகர் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, தனது திருமணம் முடிந்த அக்காவின் இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், அக்காவின் கணவர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து வெளியே கூறினால் அக்காவை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இந்த விஷயம் குறித்து சிறுமி வெளியே கூறாமல் இருந்த வந்த நிலையில், காமுகனின் கொடூரத்தால் சிறுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியின் அக்கா கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi girl sexual abuse police arrest culprits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->