கரூர் : கோவில் காவலாளி தற்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் கோவில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தெற்கு பகுதியை சேர்ந்தவர் மாதவன(45). இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனா. இவர்களிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மூன்று வருடங்களாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்த மாதவன் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மாத அவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாதவனின் உடலை பிரகித பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாதவன் தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple watchman commits suicide in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->