நாட்டிலேயே மிகவும் மோசமான எம்.பி என்றால் ஆ.ராசா தான் - அதிரவைத்த அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடி பிரச்சார மேடைக்கு வருகை தந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் சில முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியாவிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான். ஜனநாயகம் குறித்த பாடத்தை எங்களுக்கு திமுக எடுக்க தேவையில்லை. 

வாக்குக்காக மக்களுக்கு திமுக கொடுக்கும் பணமானது கஞ்சா பணம் தான். அடுத்த ஏழு நாட்களுக்கு பாஜகவினர் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி நமக்காக ஐந்து ஆண்டுகள் பணியாற்ற முடியும்” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu bjp leader annamalai speech in election campaighn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->