நாளை ஆதாரத்துடன் அனைத்தையும் வெளியிடுகிறோம் - அரசியல் வட்டாரம் பரபரப்பு.. அண்ணாமலை பேட்டி.! - Seithipunal
Seithipunal


தடுப்பூசி டோக்கனை திமுகவினர் மிரட்டி வாங்கி, அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்குகிறார்கள் என அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மக்கள் மற்றும் ஊடகத்தின் கேள்விக்கு நாளை மதியம் கமலாலயத்தில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் தெரிவிக்கப்படும். 

குடியுரிமை சம்பந்தமான விஷயங்கள் யாருக்கும் எதிரானது கிடையாது. இந்தியாவில் எந்த சட்டமாக இருந்தாலும், அது இஸ்லாமியருக்கு எதிரானது விஷம பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டம் என்பது யாருக்கும் எதிரானது கிடையாது என்பதை நாங்கள் கட்டாயம் தெளிவுபடுத்துவோம். 

இதனை வைத்து அரசியல் செய்கிறார்கள். எந்த கருத்து இஸ்லாமியருக்கு எதிராக இருக்கிறது என பதிவு செய்ய வேண்டும். பொதுவாக அது இஸ்லாமியருக்கு எதிரான சட்டம் என கூறுவதில் என்ன பயன் உள்ளது?. கருத்துக்கள் தெரிவித்தால் தான் அதனை ஆராய இயலும். 

கொரோனா தடுப்பூசியை பொறுத்த வரையில், தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளில் 70 விழுக்காடு தடுப்பூசி டோக்கன்கள் திமுகவினரால் மிரட்டி வாங்கிக்கொள்ளப்படுகிறது. அதனை ஆதாரப்பூர்வமாக புள்ளிவிபரத்துடன் நாளை தெரிவிக்கிறோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP Annamalai Pressmeet 15 July 2021 at Trichy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->