சரியாக சுத்தம் செய்யவில்லை.. அம்மா உணவாக ஊழியரின் காதை கடித்த மேற்பார்வையாளர்.!! - Seithipunal
Seithipunal


சென்னை சாலிகிராமம் வி வி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில், விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சார்ந்த தாமரைச்செல்வி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த மேற்பார்வையாளர் ராதிகா, இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை. ஒழுங்காக வேலை பாரு என தாமரை செல்வியை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் திடீரென இருவரும் கட்டிப் புரண்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். 

இந்த தாக்குதலின்போது தாமரைச் செல்வியின் கதை ராதிகா கடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த தாமரைச்செல்வி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக தாமரைச்செல்வி விருகம்பாக்கம் காவல் துறையில்  புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supervisor who bit an female employees


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->