பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் - நொடியில் நடந்த விபரீதம்.!
student loss leg in chennai kundrathur for bus accident
சென்னையில் உள்ள குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருபவர் சந்தோஷ். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சக மாணவர்களுடன் அரசு பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சந்தோஷ் குன்றத்தூர் தேரடி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பேருந்தின் பின்பக்க சக்கரம் சந்தோஷின் இரு கால்கள் மீதும் ஏறியதில் கால்கள் நசுங்கின.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், மாணவன் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு கால்களும் அகற்றப்பட்டன.
தற்போது, முதற்கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே நடைபெற்றுள்ளது. மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
student loss leg in chennai kundrathur for bus accident