திருவில்லிபுத்தூர் புகழ் பி.எஸ்.கே பேருந்தில் ரூ.2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு..!! - Seithipunal
Seithipunal


திருவில்லிபுத்தூர் அருகே ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் ரூ.2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டடிஹல் உள்ள திருவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து நிறுத்தம் இருக்கிறது. 

இந்த நிறுத்தத்தில் 3 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கை பயன்படுத்தி 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பேருந்தில் இருந்த எல்.இ.டி தொலைக்காட்சி மற்றும் ஒலி அமைப்பு கருவிகள் உட்பட ரூ.2 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளது.

இதனைக்கண்ட பேருந்து நிறுத்த காவலாளி வழிமறித்து சண்டையிட்ட நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரின் அலைபேசி கிடைத்துள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பேருந்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srivilliputhur PSK Bus accessories theft


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->