தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஆறு பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் ஆறு பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langan navy arrest six tamilnadu fishermans


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->