நண்பனின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம்.. கண்ணீருடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம்.!
SP Balasubramaniyam Motsa deepam to pacify the soul by Ilaiyaraaja
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி உடல்நிலை முதலில் சீராக இருந்தது.
பின்னாளில் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எஸ்.பி.பி உடல்நலம் தேறி வர வேண்டும் என்று திரையுலகினரும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.
செப்டம்பர் 25 ஆம் தேதியான நேற்று மதியம் 1.04 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி சரண் உறுதி செய்தனர். இவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி, இன்று காலை 11 மணியளவில் செங்குன்றம் அருகேயுள்ள தாமரைபாக்கத்தில் பண்ணை வீட்டில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை, 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.,யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இசைஞானி இளையராஜா மறைந்த தனது நண்பர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
SP Balasubramaniyam Motsa deepam to pacify the soul by Ilaiyaraaja