திருநெல்வேலியில் பயங்கரம்.! மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்.!
Son in law arrested for murdering father in law in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் மாமனாரை மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு செழியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணி உடலை (60). இவரது மகள் தனலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாலசுப்பிரமணியன், குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணி சுடலை, சம்பவத்தன்று பேரக்குழந்தைகளை அழைத்து வருவதற்காக பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது மணிசுடலைக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், மணி சுடலையை கம்பால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மணி சுடலை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மானூர் போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
English Summary
Son in law arrested for murdering father in law in tirunelveli