தேனி: சொத்து தகராறில் தந்தையை வெட்டிய மகன் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி கூடலூரில் சொத்து பிரச்சனையில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). இவருக்கு இரண்டு மனைவிகள். இவருடைய முதல் மனைவியின் மகன் முகேஷ் கண்ணன்(25).

இந்நிலையில் ஈஸ்வரனுக்கு சொந்தமாக குள்ளப்பகவுண்ட பட்டியில் வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை முகேஷ் கண்ணன், தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகேஷ் கண்ணன் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்து அறிவாளால் தந்தையை பயங்கரமாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son arrested for slashing father over property dispute


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->