தேனி: சொத்து தகராறில் தந்தையை வெட்டிய மகன் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி கூடலூரில் சொத்து பிரச்சனையில் தந்தையை வெட்டிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). இவருக்கு இரண்டு மனைவிகள். இவருடைய முதல் மனைவியின் மகன் முகேஷ் கண்ணன்(25).

இந்நிலையில் ஈஸ்வரனுக்கு சொந்தமாக குள்ளப்பகவுண்ட பட்டியில் வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை முகேஷ் கண்ணன், தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகேஷ் கண்ணன் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்து அறிவாளால் தந்தையை பயங்கரமாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து முகேஷ் கண்ணனை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Son arrested for slashing father over property dispute


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->