ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு.!
six IPS officer transfer
தமிழக அரசு ஆறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி
*காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.