அதிர வைக்கும் ஆண்டவன் உத்தரவு - சிவன்மலை கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட பொருள்..? அதிர்ச்சியில் பக்தர்கள்.!
Sivanamalai Subramanya Samy temple Puja with the kalasam of the Lord in the order box
என்ன தான் அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்தாலும், பல சம்பவங்கள், நம்மை மீறித்தான் நடக்கிறது. சென்னையில், சில ஆண்டுகளுக்கு முன்பாக, பெருவெள்ளம் ஏற்பட்டது. யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
இந்த வெள்ளத்தைப் பற்றி, பஞ்சாங்கத்திலே, “மழைவெள்ளம் வந்து விமான நிலையத் மூழ்கடிக்கும்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனால், அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. வெள்ளம் வந்து அவதிப்பட்ட பின்னர் தான் உணர்ந்தனர்.
இதே போல், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. பக்தர்களின் கனவில் வந்து ஆண்டவன் சொன்ன படி பக்தர்கள், இந்தக் கோயில் மண்டபத்தில் உள்ள கண்ணாடிப் பெட்டியில், சம்பந்தப்பட்ட பொருளை வைப்பார்கள்.
அதன் படி தான், பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பக்தரின் கனவில் ஆண்டவன் வந்து சொன்னதால், கணக்கு வழக்கு நோட்டு ஒன்று வைத்து பூஜிக்கப்பட்டது. இதனை அடுத்து, ஜி.எஸ்.டி., மற்றும் வருமானவரித்துறையின் ரெய்டுகள் அதிகமானது.
தற்போது கடவுள் உத்தரவுப்படி தீர்த்த கலசம் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப் பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது
. தற்போது தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்வது என்பது வருங்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து போகப்போகத்தான் தெரிய வரும். பஞ்சம் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சிவாச்சாரியர்கள் கூறியுள்ளனர்.
English Summary
Sivanamalai Subramanya Samy temple Puja with the kalasam of the Lord in the order box