சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. 2 பேர் பலி.!
Sivakasi crackers factory blast 2 peoples death
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே விளாம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் அரைகள் கொண்ட பட்டா சாலையில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து வந்த நிலையில் உராய்வின் காரணமாக திடீரென எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Sivakasi crackers factory blast 2 peoples death