சிவகங்கையில் சொத்து தகராறில் பெண் வெட்டிகொலை..! - Seithipunal
Seithipunal


சொத்துபிரச்சனை காரணமாக பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி மாணவர் போலீசில் சரண் அடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மீனாட்சி. செல்வராஜீக்கும், அவரது சகோதரர் சேகருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. 

இந்நிலையில், சேகரின் மகன் பாலா என்பர் அருகில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சொத்து தகராறு குறித்து பேசுவதற்காக செல்வராஜ் வீட்டிற்கு பாலா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மீனாட்சியிடம் இதுகுறித்து பாலா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் பாலா தான் கொண்டு வந்த அரிவாளால் மீனாட்சியை சரமாரியாக வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே மீனாட்சி பரிதாபாக உயிரிழந்தார். இதற்கிடையில் அக்கம் பக்கதினர் வந்துவிட்டதால் பாலா அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் மீனாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பாலா தேவகோட்டை தாலுகா போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Woman Murder Due to Land Property Issue 3 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->