வெற்றிமேல் வெற்றி! எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி! எஸ்பி உத்தரவால் அதிர்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!
Sivagaangai SP order OPS vs EPS
சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுக தரப்பிலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பிலும், தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கீழ்பதி கிராமத்தில் அதிமுக (இபிஎஸ்) சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் எம்எல்ஏ செந்தில்நாதன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே ஓபிஎஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி இளங்கோவன், சட்டத்துக்குட்பட்டு 2 மனுக்கள் மீதும் முடிவெடுக்க சிவகங்கை டிஎஸ்பி-க்கு உத்தரவு பிறப்பித்தார்.
நீதிமன்றம் உத்தரவின் பேரில், சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் பைபாஸ் ரோட்டில் ஜெ., திடலில் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினார்.
அதே சமயத்தில், சட்ட ஒழுங்கு பிரணாயை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து சிவகங்கை டிஎஸ்பி-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக இடைக்கல பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sivagaangai SP order OPS vs EPS