அமலாக்கப் பிரிவு உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது! அனல் பறக்கும் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை! - Seithipunal
Seithipunal


இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம். ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் பதில் வாதம் வைக்கப்பட்டது. 

செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

"செந்தில்பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை காவலில் வைத்திருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்" என்று, செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம் வைத்தார்.

மேலும், செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் கூறியதையும் வழக்கறிஞர் இளங்கோ சுட்டி காட்டியுள்ளார்.

கைது குறித்த தகவல், கைதுக்கான காரணங்களை தெரிவிப்பது சட்டப்பிரிவு 15ஏ படி அடிப்படை உரிமை என்றும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமாக இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

அப்போது நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து, அமலாக்கப் பிரிவு உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது என்று, செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம். ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் பதில் வாதம் வைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Wife Case chennai hc june 22


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->