#BREAKING | செந்தில்பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி மற்றும் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பணமோசடி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி புலால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்று கூறி, செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்து, மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பின்படி, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியே. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலா தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி முன் ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதம் வைத்தார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்க துறைக்கு வழங்கப்பட்ட 15 நாள் காவல் காலம் முடிந்து விட்டதால், இனி காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத்துறைக்கு  நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Case ED case Supreme court July 21


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->