உச்சநீதிமன்றம் ஓடிய அமலாக்கத்துறை! பரபரப்பு மனு தாக்கல்!  - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

"தங்கள் தரப்பு கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது" என்று, அந்த கேவிட் மனுவில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அமலாக்கத்துறை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே, கடந்த 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பாக செந்தில் பாலாஜி வழக்கில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை விவகாரத்தில் எந்த விதத்திலும் பின்னடைவை சந்திக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இது சம்பந்தமாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case ED appeal to SC


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->