செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டிப்பு.!
Senthil Balaji Court custody extended
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடி காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthil Balaji Court custody extended