இதை பற்றி பேச... பிரதமர் மோடிக்கு 'அருகதை' கிடையாது - செல்வப்பெருந்தகை பகீர் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

பா.ஜ.க அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கிறார். 

கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி சொத்து 2229 சதவீதமும் அம்பானியின் சொத்து 400 சதவீதமும் அதிகரித்துள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி இன்றைக்கு 13வது இடத்தில் உயர்ந்தவருக்கு காரணம் யார்? கார்ப்பரேட்டுகள் மோடி ஆட்சியால் பயனடைந்துள்ளது. 

இதனால் பிரதமர் மோடி ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. போதை பொருள் தடுப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பா.ஜ.க பயன்படுத்துகிறது. 

இது போன்ற பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகின்ற மக்களவைத் தேர்தல் மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaperunthagai indictment PM Modi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->