மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம், ஓமலூர் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவு அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

சேலம், ஓமலூர் புதுப்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த பழனியப்பன் (வயது 42) பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selam student harassment Teacher arrested 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->