சீர்காழி அருகே மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழப்பு.!
seerkazhi 36 year old lady mystery dead
சீர்காழி அருகே மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி அருகே திருமணமான 36 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சகோதிரியின் புகாரின் பேரின் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வழுதலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி ஜானகி (வயது 36). இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதிக்கு ஹரிணி, சர்வேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, ஜானகி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து உறவினர்கள் யாரும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல். உடனடியாக ஜானகிக்கு இறுதி சடங்குகளை செய்ய தொடங்கினர்.
அப்போது ஜானகியின் சகோதரி தெய்வநாயகி, தனது தங்கை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கூச்சலிட்டு, ஜானகியின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜானகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஜானகி மரணம் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜானகியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
seerkazhi 36 year old lady mystery dead