நாளை பள்ளிகள் திறக்க கூடாது - தனியார் பள்ளி இயக்குனர் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


நாளை எந்த காரணம் கொண்டும் தனியார் பள்ளிகள் திறக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் நாகராஜன் முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் பெய்த கன மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் 11ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்தால் மட்டுமே பள்ளிகளை திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சில தனியார் பள்ளிகள் அரசு விடுமுறை அறிவித்தாலும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Schools not open tomorrow private school director notice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->