மணப்பாறை அருகே சோகம் - விடுமுறைக்கு வந்த பள்ளி மாணவி மர்ம சாவு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ப. குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜரெத்தினம். மணப்பாறை அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி மகாலெட்சுமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால், ராஜரெத்தினம் தனது மகன் சஞ்சீவ் மற்றும் மகள் மணிமேகலையுடன் வசித்து வந்தார்.  இந்த நிலையில்  ராஜரெத்தினம் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்றிருந்த கலையரசி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மணிமேகலை குடும்பத்தில் சகோதரன் மற்றும் சித்தியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருச்சியில்  உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

இதற்கிடையே சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வீட்டுக்கு வந்திருந்த மணிமேகலை, நேற்று காலை மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மணிமேகலையின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்  மாணவியின் மர்மச்சாவு குறித்து அவரது தாத்தா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த மாணவி வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in trichy manaparai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->