நீலகிரியில் சோகம் - தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவன் பாலி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி அருகே ஓரசோலை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ரோஷன், ராகுல் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில், ரோஷன், குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் சூசையப்பர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில் இவர் இன்று காலை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அதன் படி ரோஷன் பந்திமை பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த தனியார் பள்ளி பேருந்து ரோஷன் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இதில் ரோஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரோஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student died for accident in nilgri kunnur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->