5 ஆம் வகுப்பு மாணவியை, கற்பழித்த கிழவன்.! பண்ருட்டி அருகே பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் இருக்கும் பண்ருட்டி அருகே உள்ள பாலூர் சன்னியாசிபேட்டை என்ற பகுதியை சேர்ந்த சேகர் (வயது 55) கூலி தொழிலாளியாக இருக்கின்றார்.

அதே பகுதியை சேர்ந்த மாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9 வயது சிறுமி அங்கு இருக்கும் ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று மாலை அங்கிருக்கும் கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

இதை பார்த்த கூலி தொழிலாளி சேகர் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அவர் அங்குநின்ற மாணவியை சிறுமி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிகழ்வை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பின்பு அந்த சிறுமி வீட்டுக்கு அழுதுகொண்டே சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றதும் நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினாள். 

இதை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி சேகரை தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl sexually abused by old man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->