பரிகார பூஜை செய்ய வந்த சாமியார்... துடி துடிக்க விட்ட சோகம்.!!
samiyar killed and theft jewellery
சிவகங்கை அருகே ஒக்கூர் பிள்ளையார் கோவில் பின்புறம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஆதப்பன். இவரது மனைவி மீனாட்சி, இவர்களது மகன் தஞ்சையில் வசித்து வருகிறார். முதியோர் இருவரும் தனியே வசித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, அந்த பெண் வீட்டிற்கு பால் ஊற்ற பால்காரர் வருவது வழக்கம். அப்படி வரும் போது அந்த பெண் வீடு திறந்து இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தால் அங்கு மீனாட்சி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் உடனடியாக அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறுகையில், ஆதப்பன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் கணவன் மனைவி இருவரும் சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் சென்றனர்.
அவர் பரிகார பூஜை செய்து வேல் ஒன்றை கொடுத்தார். அந்த பரிகார பூஜைக்காக 30,000 வரை சாமியார் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சாமியார் உட்பட இரண்டு பேர் வீட்டுக்கு வந்து பரிகாரம் செய்வதற்கு மேலும் பணம் கேட்டுள்ளனர்.
இதற்கு மீனாட்சி மறுக்கவே, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது மீனாட்சியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு 10 பவுன் செயின் மற்றும் தோடு உள்ளிட்டவற்றை பறித்தனர்.
மேலும் ஆத்தப்பனை கழுத்தை நெரித்து அவரிடம் வீட்டில் உள்ள நகைகளை குறித்து விசாரித்தனர். அவர் மயங்கி விட்டதால் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
samiyar killed and theft jewellery