தண்ணீர் பாட்டிலில் பல்லி.. சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி.!
samayapuram water cane lisard
உணவுப் பொருட்களின் மீதான சுத்தம், சுகாதாரம் அனைத்துமே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் அடுத்தடுத்து சம்பவங்கள் பல அதேபோல நடந்தன.
புதுக்கோட்டை அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் ஒரு பேக்கரியில் பழைய பப்ஸ சூடு செய்து கொடுத்ததால் அதை சாப்பிட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
அதுபோல தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்ய வந்த பக்தர் கோவிலில் விற்கப்பட்ட ஆசை என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை வாங்கி உள்ளார்.
அந்த தண்ணீர் பாட்டிலில் இறந்துபோன பல்லி கிடந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் பீதியடைய வைத்துள்ளது.
English Summary
samayapuram water cane lisard