நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குவாரி பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கல்குவாரியில் இருந்த பாறை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் விஜய் மற்றும் முருகன் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 1 lakh financial assistance on behalf of the Congress Nellai quarry accident


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->