கன்னியாகுமரியில் பயங்கரம்.! ரவுடி கொடூரமாகக் கொலை.! 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடியை கொடூரமாக கொலை செய்த ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ராஜ்குமார்(37). இவர் மீது இரட்டைக்கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் நேற்று இரவு புளியான் விலை பகுதியில் உள்ள ஓடை அருகே நண்பர் ஒருவருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை சாரமாறியாக அறிவாளால் வெட்டிவிட்டு, கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார், உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜ்குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ஐந்து பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy was brutally murdered in kanniyakumari


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->