மதுரையில் பயங்கரம்.! பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற மர்மகும்பல்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் பிரபல ரவுடியை மர்மகும்பல் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உலகனேரி பகுதியை சேர்ந்தவர் ரவுடி பாலமுருகன் என்கின்ற டோரா பாலா (30). இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பாலமுருகன் ஊத்தங்குடி அடுத்த ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாலமுருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பாலமுருகன் இறந்து கிடப்பதை பார்த்து, மாட்டுத்தாவணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிர் இழந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக பாலமுருகனை மர்ம கும்பல் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy hacked to murder in madurai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->