காவலர் குடியிருப்பிலே நடந்த கொள்ளை சம்பவம்? திருடர்களின் துணிகர செயல்.!! - Seithipunal
Seithipunal



வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முகம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடுபத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் சண்முகம் கடந்த சனிக்கிழமை தந்து குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் வீட்டின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டு இருந்த எட்டு சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை களவாடி சென்றுள்ளனர்.

காவலர் குடியிருப்பிலேயே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ROBBERY IN POLICE QUATRES


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->