சென்னையை அதிரவைத்த அதிகாலை விபத்து!
road accident ins chennai and sathiyamangalam
இன்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் தாறுமாறாக ஓடிய கார், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்ட போலீசார் அளித்த முதல்கட்ட தகவலின்படி, 2 தூய்மை பணியாளர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுனரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயேயும், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் பலியாகியுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் காரில் பயணித்த அனைவரும் மது போதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விபத்தில் மூவர் சம்மபவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
English Summary
road accident ins chennai and sathiyamangalam